தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, June 29, 2014

தொல்காப்பியச் சொல்லதிகாரப் பதிப்புகள்










பதிப்புகள் நூலை வாசிக்கப் பயன்படும் ஒரு கருவி என்பதைக் கடந்து அவை வரலாற்று நிலைப்பட்ட சில தன்மைகளையும் உள்ளடக்கி அமைகின்றன. பதிப் பாசிரியர்களும் நூலாசிரியர், உரையாசிரியர் போல சில விவாதங்களைத் தம் பதிப் புகளின் வழியாக முன்வைக்கின்றனர். அத்தகைய விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட காலச் செயல்பாட்டின் சமூக, அரசியல் பின்புலங்களை அறிந்து கொள்ளத் துணை புரிகின்றன. இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையர் உரைக்கு முதன்முதலாக வெளிவந்த இரு பதிப்புகள் எவ்வாறு மேற்சொல்லப்பட்ட தன்மைகளை உள்ளடக்கி அமைகின்றன என்பதைப் பின்வரும் விவாதத்தின் மூலம் அறியலாம்.