தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Saturday, July 18, 2020

கட்டைப் பை

பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விட்ட கையோட எங்க பாட்டி வீட்டுக்கு கிளம்புவோம். புது பேண்ட் சட்டை எல்லாம் போட்டு ஜோரா ரெடியாயி நிப்பன். எங்க அம்மா என் தங்கச்சி எல்லாம் ரெடியாயி வெளிவந்து சரிசரி அத எடுத்துக்கோன்னு சொல்வாங்க.
 
என்னன்னு பாத்தா பெரிய கொஞ்சம் கிழிஞ்ச கட்டப்பை. அப்ப ஒரு கடுப்பு வரும்பாருங்க. எம்மா இதுக்கு நான் ஊருக்கே வரலன்னு ஓரமா ஒக்காந்து அழுவன். எங்கம்மா எங்களாலலாம் தூக்க முடியாது. ஆம்பள பையன் நீதான் தூக்கிட்டு வரணும்னு பஞ்ச் வேற. 

தூக்கமுடியலனா சொல்லுடா தலைமேல வச்சிரன் ஈஸியா இருக்கும்னு சொல்லும். அப்படியே முடிவுக்கு வந்து தூக்கின பிறகு எதிர்க்க யாராவது வந்தா கட்டை பைய பட்டுன்னு வச்சுட்டு யாருக்கும் தெரியாம அங்க இங்கன்னு வேடிக்கை பாப்பன். போன பிறகு பயணம். பஸ்ஸூல எனக்கும் கட்டப் பைக்கும் எந்த சம்மந்தம் இல்லன்னு இருப்பன். பேண்ட் சட்டை டிப்டாப் டிரஸ் போட்டா இந்த பிரச்சனை. 

லுங்கி கட்டிட்டா நம்மள விட லோக்கல் யாரும் இல்லன்னு திரிவோம். கருவாட்டுச் சந்தைக்குள்ள எங்க மாமா கூட தெருத்தெருவா திரிவன். இதே பழக்கம்தான் இப்பயும் எங்கயாவது வந்து சேந்துருது. யாருக்காவது உடம்பு சரியில்லனா  ரோட்டுக் கடையில பழம் வாங்கினா கருப்பு கேரிபேக்ல போட்டுக் கொடுக்கறான்னு ரிலையன்ஸ் ப்ரஷ்லதான். பெருமைக்கு எருமை மேய்க்கறது இதுதான்னு அப்பப்ப மூளை சொன்னாலும் பிரஸ்டீஜ்க்கு செத்தவங்களாச்சே  நாம. விட்டுருவோம்மா என்ன.

புகைப்படம் . கு. சுரேஷ்குமார்

6 comments: