தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, July 5, 2020

தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - பதினெண் கீழ்க்கணக்கு (திருக்குறள், நாலடியார்) குறித்த தொகுப்புப் பாடல்கள்



பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலை காஞ்சியோ டேலாதி யென்பவே

கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு.


திருக்குறள்

திருக்குறள் அறத்துப்பால்

பாலாகும் வேதப் பயனாகும் பாயிரநான்

கேலாகே ளில்லறமு நாலைந்தா - மேலாந்

துறவு பதிமூன்று தொடர்ந்தூழொன் றென்ப

அறிவுநெறி யாய்ந்துண்டார் தாம். ( பெருந்தொகை)

திருக்குறள் அறத்துப்பால்

பாயிரம் நான்கு இல்லறம் இருபான் பன்மூன்றே

தூய துறவறம் ஒன்று ஊழாக - ஆய

அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்

திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து. (திருவள்ளுவமாலை - 25)

திருக்குறள் பொருட்பால்

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து

உரைநா டரண்பொரு ளவ்வொன் - றுரைசால்

படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று

குடியெழுபான் றொக்கபொருட் கூறு. ( பெருந்தொகை)

திருக்குறள் பொருட்பால்

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து

உருவல் அரணிரண்டு; ஒன்று ஒண்கூழ்; - இருவியல்

திண்படை நட்புப்பதினேழ் குடிபதின்மூன்று

எண்பொருள் ஏழாம் இவை. (திருவள்ளுவமாலை - 25)

திருக்குறள் காமத்துப்பால்

புணர்தல் பிரிதல் பொருள்கனவு கற்பென்

றுணருமிரு கூறா முரைக்கிற் - புணருங்

களவே ழறுமூன்று கற்பினவயை யைந்தா

அளவுறு காமத்துப்பா லாம்.( பெருந்தொகை)

திருக்குறள் காமத்துப்பால்

ஆண்பால் ஏழ்; ஆறிரண்டு பெண்பால்; அடுத்தன்பு

பூண்பால் இருபால் ஓர்ஆறாக - மாண்பாய

காமத்துப் பக்கம் ஒருமூன்றாகக் கட்டுரைத்தார்

நாமத்தின் வள்ளுவனார் நன்கு. (திருவள்ளுவமாலை - 25)


நாலடியார்


நாலடியார் வெண்பா

வெள்ளாண் மரபுக்கு வேத மெனச்சான்றோர்

எல்லாருங் கூடி எடுத்துரைத்த -சொல்லாரும்

நாலடி நானூறு நஙினிதா வென்மனத்தே

சீலமுட நிற்க தெளிந்து.

நாலடியார் வெண்பா

எண்பெருங் குன்றத் தெணாஅ யிருமிருடி

பண்பொருந்தப் பாடியபா நானூறுந் - திண்பொருந்தி

நீரெதிகொண் டோடுதலா நேரிசைப்பா வென்றதனைப்

பாரெதிர்கொண் டார்பயனைப் பார்த்து.

நாலடியார்  கதை வெண்பா

மன்னன் வழுதியர்கோன் வையைப்பே ராற்றினிடை

யெண்ணி யிருநான்கோ டாயிரவர் - உன்னி

எழுதியிடு மேட்டி லெதிரே நடந்த

பழுதிலா நாலடியைப் பார்.

நாலடியார் நூலைத் தொகுத்தவர்

ஞாலத் துழிதரு நற்பாட்டே கொண்டடக்கி

நாலடி நானூ றெனப்பெயரால் - வாலிதி

னீட்டித் தொகுத்தா னிசைசால் பதுமனே

கூட்டமைந்த மூன்று பால் கொண்டு


படம் : நன்றி தினமணி

1 comment:

  1. மிகவும் அருமை.
    வாழ்த்துக்கள் தோழர்.

    ReplyDelete