Monday, July 20, 2020
ஆண் கவியும் பெண் பெயரும்
ஒருமுறை நண்பராக நினைச்ச ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருந்தன். முதுகலை படிச்சப்ப. உங்களுக்கு பிடிச்ச இரண்டு பெண் கவிஞர்கள சொல்லுங்கன்னு. அவர் உடனே வேகமா சுஜாதா மீரான்னு சொன்னார். சொன்ன கையோட அரை பக்கம் விளக்கம் வேற. இருங்க அவங்க ரெண்டு பேரும் ஆண் கவிஞர்கள்னு சொன்னன். உனக்கு தெரியுமா எனக்கு தெரியுமான்னு பயங்கர கோவத்தோட வேணும்னா இன்னும் ரெண்டு பேர சொல்லவான்னு கேட்டாரு. கையெடுத்து கும்பிட்டு அத்தோட திரும்பனதுதான் இன்னும் அவர சந்திக்கல. தொல்காப்பியத்துல இருந்து அதுக்கு சைடு ரெபரன்ஸ்லாம் கடைசியா தந்தாரு பாருங்க. அதான் ரொம்ப பொறுத்துக்க முடியல.
Labels:
அனுபவமே ஆசான்
தமிழின் பெருமையை தமிழின் சிறப்பை பறைசாற்றுதல்
Subscribe to:
Post Comments (Atom)
-
தமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...
-
பிரதாப முதலியார் சரித்திரத்தின் வழியாகத் தொடங்கிய தமிழ் நாவல் வரலாற்றில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சுட்டத் தக்கது. சங்க ...
-
தொல்காப்பிய ஆய்வுகள் தொல்காப்பியம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் எனக்குக் கிடைத்தவற்றை பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தித் தந்துள்...
புறநானூறு எழுதிய ஆசிரியரின் பெயரைக் கேட்டார்.தொகுத்தவரா எழுதியவரா என்று கேட்டேன். தொகுத்தவர் உ.வே.சா. என்று தெரியாதா? எழுதியவர் பெயரைச் சொல்லுங்கள் என்றார். அவர் ஒரு நவீன புனைகதை எழுத்தாளர்.
ReplyDeleteகொடுமையை கொடுமை
Deleteநானும் இப்படி எக்குத்தப்பாய் பதில் சொல்லுபவர்களை சந்தித்திருக்கிறேன். தானும் குளம்பி மத்தவர்களையும் குளப்புவார்கள்.
Delete