தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, July 19, 2020

தோசை என்பது கலை

தோசை ஊத்தத் தெரியல நீலாம் என்னடா இத்தனை வருஷம் கடையில வேல பாக்கற. ஒவ்வொரு வருஷ தேர் திருவிழா வியாபாரத்துக்கும் இந்த மாஸ்டருங்கள நம்பி நம்பி ஏமாற வேண்டியதா இருக்கு. ஒருத்தனும் ஒழுங்கா இருக்க மாட்டறானுங்க. நீலாம் என்னதான் பண்ணபோறியோன்னு எங்க மாமா தலையில அடிச்சு திட்டனப்போ ஒரு கோவம் வந்துச்சு. 

என்னா பெரிய தோசைன்னு களத்துல இறங்கினன். பெரிய அடுப்பு பெரிய தோசைக்கல்லு. அடுப்ப பராமரிக்கறதே முத வேல. தோசைக்கல்ல பக்குவமா வச்சிக்கணும். மாவு சரியான கரைசல்ல இருக்கணும். தோசையோட வெரைட்டிஸ் எல்லாம் தெரிஞ்சிக்கணும்னு ஒவ்வொன்னா இறங்கிக் கத்துக்கிட்டன். ஒரு வருஷம்தான். பரோட்டா,தோசை, பரோட்டாவின் வகைகள், தோசையின் வகைகள்னு என அத்தனையிலயும் அத்துபடி. 

மூணுவருஷம் நான் தான் எங்க ஊரு தேர் திருவிழாவுல மாஸ்டர். நூறு கிலோ பரோட்டாவ சாதாரணமா தட்டி போடற அளவுக்கு டிரெயினிங். மூணு வருஷத்து முன்னடி வந்த மாஸ்டரே வாயப் பொளந்து நான் இனி வேணாம்னு திரும்பிப் போயிட்டாரு. தலைதட்டன எங்க மாமாவே கணேஷான்னு ஆயிட்டாரு. 

பி.எச்டி சேந்த  பிறகும் ஊரு பக்கம் போணம்னா கணேஷ் ஒரு ஆப்பாயில் உங்ககையால போடன் தோசை ஒன்னு ஊத்தன்னு ஊர்க்காரங்க வந்து நிக்கப்பறப்ப உண்மையாவே நாம நல்லதான் வேலை பண்ணிருக்கோம்னு தோணும்.

எங்க மாமாவோட அந்த அன்பான அடிதான் ஒவ்வொரு வேலையையும் கையில எடுக்கறப்ப உற்சாகப்படுத்தும்.. சில நேரங்கள்ல நம்ம மேல விழற அடிகள சாதாரணமா எடுத்துக்கக்கூடாது. அந்த அடிகள் நம்மளோட வாழ்க்கைப் பாதைகளை நமக்குக் காண்பிக்கற அடிகளாக கூட இருக்கும்.

புகைப்படம்: k. சுரேஷ்குமார்

No comments:

Post a Comment